கொழும்பு வந்தார் ஜெய்சங்கர் – பாதுகாப்பு , சம்பூர், திருமலை விவகாரங்களுக்கு முக்கியத்துவம்
சிறிலங்கா அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுமாலை கொழும்பு வந்தடைந்தார். கடந்த 11 மாதங்களில் இவர் சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள மூன்றாவது பயணம் இதுவாகும்.


