மேலும்

மாதம்: February 2017

கொழும்பு வந்தார் ஜெய்சங்கர் – பாதுகாப்பு , சம்பூர், திருமலை விவகாரங்களுக்கு முக்கியத்துவம்

சிறிலங்கா அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுமாலை கொழும்பு வந்தடைந்தார். கடந்த 11 மாதங்களில் இவர் சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள மூன்றாவது பயணம் இதுவாகும்.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மற்றொரு இரகசிய வதைமுகாம் இரகசியங்கள் அம்பலம்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டில் சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு- சிங்கப்பூர் பிரதமர் நம்பிக்கை

சிறிலங்காவுடன் இந்த ஆண்டில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கு சிங்கப்பூரில் இருதய சத்திரசிகிச்சை

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சிக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கேப்பாப்பிலவு முகாமை விலக்கும் உத்தரவு வரவில்லை – சிறிலங்கா விமானப்படை

சிறிலங்கா விமானப்படையினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்பிலவு மக்கள் நடத்தும் தொடர் போராட்டம் இன்று 20ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், தமது நிலைகளை அங்கிருந்து விலக்கிக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று சிறிலங்கா விமானப்படை கூறியுள்ளது.

கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கில் சிறிலங்கா இராணுவ மேஜரும் இரு படையினரும் கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஒருவரும், இரண்டு படையினரும் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கடும் கொந்தளிப்புக்கு மத்தியில், தமது அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துள்ளார்.

பாகிஸ்தான் போர்க் கல்லூரியில் கடற்புலிகள் குறித்து பாடம் நடத்திய சிறிலங்கா கடற்படைத் தளபதி

பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கல்லூரியில் கடற்புலிகள் தொடர்பாகவும், அவர்களின் எழுச்சி வீழ்ச்சி தொடர்பாகவும் விரிவுரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன.

‘விமானப்படையின் காணி’ , ‘நுழைந்தால் சூடு’ – கேப்பாப்பிலவு மக்களுக்கு எச்சரிக்கை

தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 19ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தக் காணிகள் தமக்கே சொந்தம் என்றும், அதற்குள் நுழைந்தால் சுடப்படுவீர்கள் என்றும் சிறிலங்கா விமானப்படை எச்சரித்துள்ளது.

திங்களன்று மைத்திரி, ரணிலை சந்திக்கிறார் ஜெய்சங்கர் – ஜெனிவா குறித்தும் பேசுவார்

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், வரும் திங்கட்கிழமை சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.