மேலும்

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

maithriசிறிலங்காவில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதம்தோறும் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்காவில் கடந்த 40 ஆண்டுகளில் மோசமான வரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், சிறிலங்காவில் சுமார் ஏழு இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல் வெளியிட்டிருந்தது.

வரட்சி மற்றும் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைச் சமாளிக்கும் வகையில் சிறிலங்கா அதிபர் செயலணி ஒன்றை நியமித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாரிகளுடன் நடத்திய கூட்டம் ஒன்றில், வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய விரிவான தரவுகளை திரட்டுவதற்கு மாவட்டச் செயலர்கள், கிராம அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை அமைக்குமாறும் சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

விவசாயிகளுக்கான கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *