மேலும்

நாள்: 20th February 2017

நிலமீட்புப் போராட்டத்துக்கு ஆதரவாக வடபகுதி மாணவர்கள்

சிறிலங்கா விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, பிலக்குடியிருப்பு மக்கள், கேப்பாப்பிலவு விமானப்படை முகாம் முன்பாக 21 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று மாணவர்கள் ஒரு மணிநேர கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

சிறிலங்கா அதிபர், கூட்டமைப்புடன் இந்திய வெளிவிவகாரச் செயலர் பேச்சு

மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இன்று சிறிலங்கா அதிபர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புகளுடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தினார்.

சீன உதவி வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம்

சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கொங் சுவான்யோ சிறிலங்காவுக்குத் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பதற்றத்தில் கோத்தா – சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனை

தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சட்டவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்திய – சிறிலங்கா உடன்பாடு : சிஐஏ அறிக்கையை நிராகரிக்கும் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வாளர்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ)  ஆவணத்தின் பிரகாரம், ‘யாழ்ப்பாணத்தை’ கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு  கட்டளையிட்ட போதும் சிறிலங்கா இராணுவத்தினர் இரண்டு தடவைகள் தனது கட்டளையை நிராகரித்ததன் காரணமாக இந்தியாவின் தலையீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதாக 1988 பெப்ரவரியில் சிறிலங்காவிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரியிடம் அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜெயவர்த்தன தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – ஜெனிவாவில் சுமந்திரன் பரப்புரை

2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்கா எந்த மாற்றங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

கீத் நொயார் கடத்தல் விசாரணையில் புதிய திருப்பம் – கோத்தாவே சூத்திரதாரி

தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்துடன், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தொடர்புபட்டிருந்தார் என்று கல்கிசை நீதிமன்றத்தில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு உச்சி மாநாட்டை நடத்த சிறிலங்கா விருப்பம்

எழுந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் கடல்சார் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைள் குறித்து ஆராய்வதற்கு இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு உச்சிமாநாடு ஒன்றை நடத்தும் திட்டத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிமசிங்க முன்மொழிந்துள்ளார்.

ஹவாயில் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்- சிறிலங்கா மேஜரை திருப்பி அனுப்பியது அமெரிக்கா

சிறிலங்கா அரசாங்கத்தினால் சிறப்புப் பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட மேஜர் தர அதிகாரி ஒருவர், அங்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை அடுத்து  நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சிறிலங்கா – இந்தியா இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைககள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.