மேலும்

நாள்: 9th January 2016

அடுத்தமாதம் யாழ்ப்பாணம் செல்கிறார் சுஸ்மா சுவராஜ்

இந்திய – சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா செல்கிறார் இந்திய வெளிவிவகாரச் செயலர் – தமிழ்க்கட்சிகளைப் புறக்கணிப்பு?

சிறிலங்கா அரசின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வரும் 12ஆம் நாள் கொழும்பு செல்லவுள்ளார்.

சிறிலங்காவில் துறைமுகம் அமைக்கும் சீனாவின் முயற்சி – அமெரிக்க, இந்திய தளபதிகள் ஆலோசனை

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், தனது துறைமுகங்களை உருவாக்கும் சீனாவின் திட்டம் தொடர்பாக, அமெரிக்க- இந்தியக் கடற்படைத் தளபதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளில் நோர்வே பங்கேற்காது – போர்ஜ் பிரெண்டே

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளில், நோர்வே முன்னரைப் போன்று எந்தப் பங்கையும் வகிக்காது என்று, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்டே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை – செவ்வாயன்று வாக்கெடுப்பு

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றும் நடவடிக்கை வரும் 12ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டார் ஹிருணிகா – பிணையில் விடுவிப்பு

கொழும்பில் இன்று காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹருணிகா பிரேமச்சந்திர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமைதிக்காலத்திலும் இயங்கும் சிறிலங்காவின் சித்திரவதை இயந்திரம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் உள்நாட்டுப் போரின் பின்னான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில் பாராட்டத்தக்க நிலையிலேயே இருப்பினும், அங்கு வாழும் மக்கள் தற்போதும் பல்வேறு சித்திரவதைகள் மற்றும் மீறல்களுக்கு உட்படுவதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையாக மாறுகிறது நாடாளுமன்றம் – இன்று காலை சிறப்பு அமர்வு

சிறிலங்கா நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை இன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரகீத் கடத்தல் – மேலும் இரு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைதாகின்றனர்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்கடத்தல் வழக்கில் ஹிருணிகாவைக் கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு

தெமட்டகொடவில் இளைஞர் ஒருவரைக் கடத்திய சம்பபவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவைக் கைது செய்ய, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளார்.