மேலும்

அரசியலமைப்பு சபையாக மாறுகிறது நாடாளுமன்றம் – இன்று காலை சிறப்பு அமர்வு

parliamentசிறிலங்கா நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை இன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொள்வதற்காக, நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இதன்போது முழு நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையை பிரதமர் சமர்ப்பிப்பார்.

இதையடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட கட்சித் தலைவர்கள்,அமைச்சர்கள் உட்பட பலரும் இதில் உரையாற்றவுள்ளனர்.

நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பின்னர் அதன் செயற்பாடுகளை இலகுபடுத்த உப குழுக்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பின்னரும், சாதாரண சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தை வழமைபோன்று கூட்ட முடியும்.

அதேவேளை, தேவையாயின் நாடாளுமன்றத்தை கூட்டாது அரசியலமைப்பை திருத்தும் பணிகளை மட்டும் அரசியலமைப்பு சபையினூடாக முன்னெடுக்கவும் முடியும்.

சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்று ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையிலேயே, இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *