மேலும்

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளில் நோர்வே பங்கேற்காது – போர்ஜ் பிரெண்டே

borge brendeசிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளில், நோர்வே முன்னரைப் போன்று எந்தப் பங்கையும் வகிக்காது என்று, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்டே தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நோர்வே வெளிவிவகார அமைச்சர், இலங்கை வர்த்தக சம்மேளனத்தில், சிறிலங்காவின் வர்த்தக சமூகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர், பிஸ்னஸ் ரைம்சிடம் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.

முதலீடு, வர்த்தக வாய்ப்புகள் ஊடாகவே சிறிலங்காவுக்குள் நுழைவதில் நோர்வே கவனம் செலுத்துகிறது.

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு நோர்வே தொடர்ந்தும் ஆதரவு வழங்கும். ஆனால், முன்னரைப் போன்று எந்தப் பங்கையும் வகிக்காது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *