மேலும்

சிறிலங்கா அமைச்சரின் குற்றச்சாட்டை அமெரிக்கத் தூதரகம் நிராகரிப்பு

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயன்றதாக, சிறிலங்கா அமைச்சர் குணரத்ன வீரக்கோன் சுமத்திய குற்றச்சாட்டை, அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.

அமெரிக்கத் தூதுவர் இலஞ்சம் தர முயன்றார் – சிறிலங்கா அமைச்சர் பரபரப்புக் குற்றச்சாட்டு.

சிறிலங்காவில் இருந்து வெளியேறும் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயன்றதாக, சிறிலங்கா அமைச்சர் குணரத்ன வீரக்கோன் பரப்புரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவுக்கு திரும்பினார் சிசன் – ஐ.நா பதவியை ஏற்கிறார்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய மிச்சேல் ஜே சிசன் நேற்றுடன் தனது பணியை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார்.

டிசம்பர் 20 இற்கு பின்னரே கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளிவரும் – மாவை சேனாதிராசா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரை நிறுத்தாது என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, இந்த தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தான் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி மகிந்தவுக்கு ஆதரவு

சிறிலங்காவின் மூத்த அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில் இருந்து தப்பிக்க சிறிலங்கா முயற்சி

சிறிலங்காவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதை தடை செய்யப் போவதாக, ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதுகுறித்துப் பேசுவதற்காக, சிறிலங்கா அமைச்சர் சரத் அமுனுகம பிரசெல்ஸ் செல்லவுள்ளார்.

எரிபொருள்களின் விலை திடீரென குறைப்பு – மகிந்தவின் அடுத்த தேர்தல் குண்டு

சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதமே உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள்களின் விலை, சிறிலங்கா அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் வீரசூரியவுக்கு எதிராக போர்க்குற்ற முறைப்பாடு பதிவு – கைது செய்யப்படுவாரா?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, போர்க்குற்றங்களை இழைத்ததாக, தென்னாபிரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரியவுக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து தேசிய அரசே ஆராயுமாம் – நழுவுகிறார் மைத்திரி

அதிபர் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படும் தேசிய அரசாங்கமே, தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராயும் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘பாப்பரசர் சிறிலங்காவுக்கான பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்’ – சிறிலங்கா வாழ் பிரதிநிதிகளும் மதகுருமார்களும் வேண்டுகோள்

“சிறிலங்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து ஐந்து நாட்களின் பின்னர் பாப்பரசர் அவர்கள் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சிறிலங்கா அரசாங்கமானது இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன், மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு பாப்பரசர் அவர்கள் தனது ஆதரவை வழங்குவதாக பரப்புரை மேற்கொள்வதால் இந்தப் பயணத்தைப் பிற்போடவேண்டும்”