மேலும்

மகிந்த சொல்வது பொய் – சிறிலங்கா காவல்துறை பேச்சாளர்

ajith-rohanaதனது வீட்டை சிறிலங்கா காவல்துறையினர் சோதனையிட்டதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பொய்க் குற்றச்சாட்டுக் கூறுவதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

தங்காலையில் உள்ள தனது வீட்டை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டு பொய்யானது.

தங்காலையில்  உள்ள அவரது வீட்டில் தேடுதல் நடத்தப்படவில்லை.

கார்ல்டன் தோட்டம் மற்றும் மண்டபம் என்பன வீரகெட்டியவில் தான் உள்ளன.

அங்கு கடல் விமானம் மற்றும் லம்போகினி கார் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபருக்கு கிடைத்த தகவலை அடுத்தே தேடுதல் நடத்தப்பட்டது.

இந்த தேடுதலில் காவல்துறை மா அதிபருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *