மேல் மாகாண ஆளுனராக கே.சி.லோகேஸ்வரன் நியமனம்
மேல் மாகாண ஆளுனராக மூத்த சிவில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரான கே.சி.லோகேஸ்வரன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தென்கொரியாவுக்கான தூதுவராகவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் இயக்குநர் சபை உறுப்பினராகவும், நிதியமைச்சின் முன்னாள் ஆலோசகராகவும் கே.சி.லோகேஸ்வரன் பணியாற்றியுள்ளார்.
இதனிடையே, தெற்கு மாகாண ஆளுனராக ஹேமகுமார நாணயக்காரவும், வடமேல் மாகாண ஆளுனராக அமரா பியசீலி ரத்நாயக்கவும் சிறிலங்கா அதிபரிடம் நியமனங்களைப் பெற்றனர்.
இதற்கிடையே, மத்திய வங்கி ஆளுனராக அர்ஜுன் மகேந்திரன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.