விரைவில் உள்நாட்டு விசாரணைக் குழு – அமைச்சர் ராஜித தகவல்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உள்நாட்டு விசாரணைக் குழுவொன்று விரைவில் அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை சீன செய்தி நிறுவனமான சின்ஹுவாவிடம் வெளியிட்டுள்ளார் சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன.
இந்த உள்நாட்டு விசாரணைக்குழுவை நியமிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடனும், ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக் குழு பொருத்தமான நிபுணர்களை கொண்டதாக இருக்கும் என்றும் விரைவில் இது நியமிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.