மேலும்

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது

ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கில் கோத்தா அபகரித்த தமிழ்மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படும் – சம்பிக்க ரணவக்க

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தமிழ் மக்களிடம் இருந்து அபகரித்த காணிகள் மீண்டும் அவர்களிடமே வழங்கப்படும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்தார் நிஷா பிஸ்வால் – இன்றும் நாளையும் முக்கிய பேச்சு

தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக  இன்று அதிகாலை கொழும்பு வந்து சேர்ந்துள்ளார்.

புலிகளின் நிதிக்கு நடந்தது என்ன? – விசாரணை நடத்தப் போவதாக ரணில் அறிவிப்பு

போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்தும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளிகளை தண்டித்து விட்டு பொதுமன்னிப்பு அளிக்க திட்டம்?

போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்தி, குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் நரேந்திர மோடி தீவிர அக்கறை – முரளிதர் ராவ்

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர அக்கறை கொண்டுள்ளதாக, பாஜகவின் தேசிய செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை அனைத்துலக தரம் வாய்ந்தாக இருக்க வேண்டும் – பான் கீ மூன்

போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா உருவாக்கும் உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறை, அனைத்துலகத் தரம் வாய்ந்ததாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

குழப்பத்தை ஏற்படுத்த முனையும் இராணுவ அதிகாரிகள் – கருத்துக்கூற மறுக்கும் இராணுவப் பேச்சாளர்

வடக்கில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு இரண்டு இராணுவ அதிகாரிகள் ஒரு குழுவினருக்குப் பயிற்சிகளை அளித்து வருவதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கருத்து வெளியிட மறுத்துள்ளார்.

ஐதேக அரசுடன் மீண்டும் ஒட்டிக்கொள்ள முயன்ற ரம்புக்வெல – வெட்டிவிட்டார் ரணில்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்த கெஹலிய ரம்புக்வெல, மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ள முயன்ற போதிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது மகிந்த அரசு விதித்த தடை தொடரும் – சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.