சிறிலங்காவுடனான உறவுகளில் நல்லிணக்கம் மீது கூடுதல் கவனம் – இந்தியா கூறுகிறது
சிறிலங்காவுடனான உறவுகளில் சிறிலங்காவின் தேசிய நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளிலும் நடந்த தேர்தல்களுக்குப் பின்னர், சிறிலங்காவுடனான இந்தியாவின் உறவுகளில் தேசிய மீள்கட்டுமானம் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றின் மீது கவனம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.