ரவிராஜ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு- எதிரிகளின் விடுதலையும் ரத்து
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட எதிரிகளின் விடுதலையை ரத்து செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.


