மேலும்

மகிந்தவை பிரதமராக நியமிக்காவிடின் செங்கோலைக் கைப்பற்றுவோம் – எச்சரிக்கிறது மகிந்த அணி

maceமகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்கா விட்டால், செங்கோலைத் தூக்கிக் கொண்டு, தாம் நாடாளுமன்றத்தைச் சுற்றி ஓடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் சாலிந்த திசநாயக்க.

குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும், சாலிந்த திசநாயக்க இன்று பொல்பிட்டிகமவில் நடந்த தேர்த்ல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சாலிந்த திசநாயக்க,

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்று, மகிந்த ராஜகபக்சவை பிரதமராக நியமிக்காது போனால், எமது குழுவினர் செங்கோலுடன் நாடாளுமன்றத்தைச் சுற்றி ஓடுவோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *