மேலும்

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது

H M G S Palihakkaraவடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கும் முயற்சிகளை தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே, ஆளுனர் தரப்பில் இந்த முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுமதி மறுத்து வந்தது.

எனினும், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அண்மையில் மாகாண முதலமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்த போது, வடக்கு மாகாணசபை முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க அனுமதி அளிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன், முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஆளுனருடன் கலந்துரையாடி அவரது கருத்தை அறியும்படி, அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானத்திடம் கேட்டிருந்தார்.

இதையடுத்து, அவர் வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவை அவர் சந்தித்துப் பேசினார்.

இப்போதே அவர், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று பதிலளித்துள்ளார்.

இந்த தகவலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் லண்டனில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *