தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம்
சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குகளை எண்ணும் பணி முடிவடைந்த போதிலும், தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குகளை எண்ணும் பணி முடிவடைந்த போதிலும், தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் வட்டார ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
வலிகாமம் தெற்கு பிரதேசசபைத் தேர்தலில், குப்பிளான் வட்டாரத்தில் சீட்டுக் குலுக்கலின் மூலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் நிலை இல்லை என்று தெரியவருகிறது.
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக 11 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 வட்டாரங்களில், 6 வட்டாரங்களைக் கைப்பற்றிய போதிலும், விகிதாசார முறையில் எந்த இடங்களும் கிடைக்காததால், அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள போதும், அறுதிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.
சிறிலங்காவில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வலிகாமம் வடக்கு பிரதேசபைக்கான தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17 ஆசனங்களைக் கைப்பற்றி பெரு வெற்றி பெற்றுள்ளது.