மேலும்

நாள்: 18th February 2018

மகிந்த மீள்வருகை – வெளிநாட்டு இராஜதந்திரிகள் கவலை

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திர சமூகத்தினர் கவலையடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரணிலை நீக்குவது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோராத சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தமது ஆலோசனையைக் கோரவில்லை என்று சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

சீனாவின் திட்டங்கள், முதலீடுகளுக்கு சிறிலங்கா அதிபர் ஆதரவு

சீனாவின் திட்டங்கள், முதலீடுகளுக்கு சிறிலங்கா உறுதியான ஆதரவை வழங்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

ரணிலும் கரு ஜெயசூரியவும், சிறிலங்கா அதிபரைச் சந்திப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜெயசூரியவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள் – மைத்திரியை சந்தித்து சம்பந்தன் வலியுறுத்தல்

2015 அதிபர் தேர்தலின் போது, பெற்றுக் கொண்ட மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்ற வாசற்படியில் தடுக்கி விழுந்த மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உச்சநீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார்.

ரணில் பக்கம் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்? – முடிவுக்கு வரும் குழப்பம்

உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து, கொழும்பு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை தற்போது, மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமான திருப்பத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரியின் தொலைபேசி அழைப்பு – பேசாமல் நழுவினார் மகிந்த

கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் ஒரு கட்டத்தில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சை இழக்கிறார் சாகல?

அமைச்சரவை மாற்றத்தின் போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியில் இருந்து சாகல ரத்நாயக்க விலக்கப்படவுள்ளார் என்று அரசாங்கம் வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.