பச்சிலைப்பள்ளி பிரதேச சபை முடிவு – கூட்டமைப்புக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை
கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 வட்டாரங்களில், 6 வட்டாரங்களைக் கைப்பற்றிய போதிலும், விகிதாசார முறையில் எந்த இடங்களும் கிடைக்காததால், அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இதனால், கூட்டமைப்பு 6 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு என்பன 7 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. இதனால் தொங்கு சபை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 2,953 வாக்குகள் – 6 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு – 2,070 வாக்குகள் – 4 ஆசனங்கள்
தமிழ் காங்கிரஸ் – 651 வாக்குகள் – 1 ஆசனம்
ஈபிடிபி – 465 வாக்குகள் – 1 ஆசனம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 330 வாக்குகள் – 1 ஆசனம்
ஐதேக – 179 வாக்குகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 59 வாக்குகள்
லங்கா சமசமாசக் கட்சி – 44 வாக்குகள்