வலி. வடக்கு பிரதேச சபையில் கூட்டமைப்பு பெரும் வெற்றி
வலிகாமம் வடக்கு பிரதேசபைக்கான தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17 ஆசனங்களைக் கைப்பற்றி பெரு வெற்றி பெற்றுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின், 21 வட்டாரங்களின் தேர்தல் முடிவுகள் தெரிய வந்துள்ளன. இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17 வட்டாரங்களில் வெற்றியீட்டியுள்ளது.
ஈபிடிபி 3 வட்டாரங்களில் வெற்றி பெற்று இரண்டாவது .இடத்தில் உள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 1 வட்டாரத்தில் வெற்றி பெற்றுள்ளது.
விகிதாசார பிரதிநிதித்துவ ஒதுக்கீடுகளுடனான தேர்தல் முடிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை