மேலும்

நாள்: 22nd February 2018

கொழும்பு வந்து சேர்ந்தார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இன்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் 10 சபைகளில் பெண்களுக்கான 25 வீத இட ஒதுக்கீட்டில் சிக்கல்

வடக்கு, கிழக்கில் உள்ள குறைந்தது 10 உள்ளூராட்சி சபைகளில், பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாலைதீவும் சிறிலங்காவும்

மாலைதீவு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தாக்கம் சிறிலங்காவில் ஆட்சியைக் கைப்பற்றும் என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எச்சரிக்கைக்கு உள்ளாக்குகிறது.

பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – தீவிரமாக நிலைப்பாட்டில் பிரித்தானியா

லண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா அரசு வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியன தொடர்பான வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக விசாரணை நடத்தப்படாது

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கலந்துரையாடலுக்காகவே கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இந்தவாரம் அமைச்சரவை மாற்றம்

அமைச்சரவை மாற்றம் இந்த வாரம் இடம்பெறும் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தீவிரவாத செயலாக இருந்தால் சேதம் அதிகமாக இருந்திருக்கும் – இராணுவப் பேச்சாளர்

தியத்தலாவவில் நேற்று நிகழ்ந்த பேருந்து குண்டு வெடிப்பு தீவிரவாத செயலாக இருந்தால், சேதமும், வெடிப்பும் மிகப் பெரியதாக இருந்திருக்கும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.