மட்டக்களப்பு மாநகரசபையில் 17 வட்டாரங்களை கைப்பற்றியது கூட்டமைப்பு
மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் வட்டார ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
மட்டக்களப்பு மாநகர சபையில் உள்ள 20 வட்டாரங்களுக்கு நடந்த தேர்தலில் 17 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
திராய்மடு வட்டாரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், திருப்பெருந்துறையில் சுயேட்சைக் குழுவும், நொச்சிமுனையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
எனினும், மாநகரசபையின் விகிதாசார ஆசன ஒதுக்கீட்டின்படியான 13 உறுப்பினர்களின் விபரம் இன்னமும் வெளியிடப்படவில்லை.