மேலும்

காணாமல்போனோர் பணியகம் அடுத்த ஆண்டே முழுஅளவில் செயற்படும் – மனோ தித்தவெல

Mano_thiththawellaகாணாமல்போனோருக்கான பணியகம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுப் பகுதியிலேயே முழு அளவில் செயற்படத் தொடங்கும் என்று நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் மனோ தித்தவெல தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அமைதியைப் கட்டியெழுப்பும் ஆணையத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“காணாமல்போனோர் பணியகத்துக்கான ஆணையாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலஎல்லை முடிந்து 10 நாட்களாகி விட்டன.

ஆணையாளர் பதவிகளுக்குப் பொருத்தமான விண்ணப்பதாரிகளை தெரிவு செய்வதற்கான நேர்காணலை அரசியலமைப்புச் சபை விரைவில் நடத்தும்.

உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்கும் சட்டத்தின் வரைவும் தயாரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், நிபுணர்களுடன் மேலதிக கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன.

அனைத்துல நடைமுறை, மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிவில் சமூக குழுவே இதனைத் தயாரித்துள்ளது.

உண்மை ஆணைக்குழு, பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் தொடர்பான, அனைத்துலக நிபுணர்களின் அனுபவங்கள் எமக்கு உதவியாக உள்ளன.

2017ஆம் ஆண்டு சிறிலங்கா மிகவும் மெதுவான ஆனால் உறுதியான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. பெரும்பாலான முன்னேற்றங்கள் கண்களால் பார்க்க முடியாதவை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *