மேலும்

சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு 6 மாத சேவை நீடிப்பு

Rear Admiral Sirimevan Ranasingheசிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆறுமாத சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.

கடந்த மாதம் 19ஆம் நாள் சிறிலங்கா கடற்படையின் 22 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார் வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க.

இவர், கடந்த 19ஆம் நாளுடன் 55 வயதைப் பூர்த்தி செய்த நிலையில், அவருக்கு மேலும் 6 மாதங்கள் சேவை நீடிப்பு வழங்கி சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா கடற்படையின் 21 ஆவது தளபதியாக இருந்த அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு சிறிலங்கா அதிபர் ஒரு மாதமே சேவை நீடிப்பு வழங்கியதால், 65 நாட்களில் அவர் ஓய்வுபெற நேரிட்டது.

எனினும், அவரையடுத்து பதவியேற்ற வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவுக்கு ஆறுமாத சேவை நீடிப்பு சிறிலங்கா அதிபரால் வழங்கப்பட்டுள்ளமை பாதுகாப்பு வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *