மேலும்

கொழும்பு வந்த ‘சயுரால’ போர்க்கப்பலுக்கு பெரும் வரவேற்பு

DCIM100MEDIADJI_0022.JPGஇந்தியாவின்  கோவா கப்பல் கட்டும் தளத்தில் சிறிலங்கா கடற்படைக்காக கட்டப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துப் படகு இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

சிறிலங்கா கடற்படைக்காக  முதல்முறையாகக் கொள்வனவு செய்யப்பட்ட புத்தம் புதிய ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ‘சயுரால’ இன்று காலை கொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைந்த போது, இழுவைப்படகுகளில் இருந்து நீர் பாய்ச்சப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதேவேளை,  சிறிலங்கா கடற்படையினரும் பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகளுடன் வரவேற்பு அளித்தனர்.

DCIM100MEDIADJI_0022.JPG

DCIM100MEDIADJI_0067.JPG

66.55 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் ஓகஸ்ட் 2ஆம் நாள் கடற்படையில் இணைத்து வைப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *