மேலும்

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு நாளை கைச்சாத்து

ranilஅம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு திட்டமிட்டபடி நாளை கைச்சாத்திடப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டு வரைவு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.

எனினும், இன்று நாடாளுமன்றத்தில் குழப்பங்கள் ஏற்பட்டதால், அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்த விவாதம் நடத்தப்படவில்லை.

எனினும், திட்டமிட்டபடி நாளை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இந்த உடன்பாட்டுக்கு அமைய அம்பாந்தோட்டை துறைமுகத்தின்  69.55 வீத பங்குகள் சீன நிறுவனத்துக்கும்,  30.45 வீத பங்குகள் சிறிலங்கா அரசுக்கும் உரித்துடையதாக இருக்கும்.

நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் இந்த உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *