சிராந்தியும், யோசிதவும் விசாரணைக்கு வராமல் நழுவினர்
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்குத் தொடர்பான விசாரணைக்காக நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டிருந்த சிராந்தி ராஜபக்சவும், யோசித ராஜபக்சவும், முன்னிலையாகவில்லை.
வசீம் தாஜூதீன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிரிலிய சவிய அமைப்பின் வாகனத்தை சிராந்தமி ராஜபக்ச பயன்படுத்தியமை தொடர்பான விசாரணைக்காக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்சவும், மகன் யோசித ராஜபக்சவும் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
நேற்றுக் காலை சிராந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர் முன்லையாகவில்லை.
அதேவேளை, யோசித ராஜபக்சவும் விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை.
இதனால் இவர்களுக்கான விசாரணையை வேறொரு நாளில் மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.