மேலும்

மாதம்: July 2017

இந்தியாவிடம் வாங்கும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் பயிற்சி பெறும் சிறிலங்கா கடற்படையினர்

இந்தியாவிடம் வாங்கப்படும் பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பலை  செலுத்தும் பயிற்சிகள் மற்றும் சோதனைகளில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக, அனைத்துலக பாதுகாப்பு ஊடகமான ‘ஜேன்ஸ் 360” செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கின் பிரதான சுற்றுலா கேந்திரமாக மாறுகிறது மன்னார்

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டம் பிரதான சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளதாக சிறிலங்காவின் சுற்றுலாத் துறை அமைச்சை மேற்கோள்காட்டி சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.

இனிமேல் எதேச்சாதிகார, இராணுவ ஆட்சிக்கு இடமில்லை – சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் இனிமேல் எதேச்சாதிகார ஆட்சிக்கோ, இராணுவ ஆட்சிக்கோ இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கால் வைக்கிறது சீன வங்கி

சீனாவின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான சீன வங்கி  (Bank of China), கொழும்பில் கிளை ஒன்றை இந்த ஆண்டில் ஆரம்பிக்கவுள்ளது.

சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்கள் திருட்டு – முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு அழைப்பாணை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை வெட்டி எடுத்து பழைய இரும்பாக விற்பனை செய்த மோசடி தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை, பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது.

சம்பூர் பெருநிலப்பரப்பில் நடந்தேறிய இனப்படுகொலை (07.07.1990)

வீரம் கொழித்த மறவர் வாழும் வீரநிலம் சம்பூர். இங்கு இரத்த சகதியும் மரண ஓலமும் நிரம்பி வழிந்த நாள் இது.  சிங்கள பௌத்த இராணுவத்தாலும், அவர்களோடு இயங்கிய கூலிப்படைகளாலும் அப்பாவி தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்ட கோரம்  நடந்தேறி இன்றுடன் இருபத்தேழு ஆண்டுகள்.

இன்று மகிந்தவைச் சந்திக்கவுள்ள 8 பிரதியமைச்சர்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எட்டு பிரதி அமைச்சர்கள் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்று கொழும்பு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பளிக்கும் சட்டமூலம் விலக்கப்பட்டது ஏன்?- மகிந்த சமரசிங்க

பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் அனைத்துலக பிரகடன சட்டமூலம், மேலும் ஆய்வுகள் செய்யப்பட்டு, கலந்துரையாடப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்

மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக பொறுப்பேற்றார் கபில வைத்தியரத்ன

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்ட, கபில வைத்தியரத்ன நேற்று பாதுகாப்பு அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.