மேலும்

இனிமேல் எதேச்சாதிகார, இராணுவ ஆட்சிக்கு இடமில்லை – சிறிலங்கா அதிபர்

maithri-met-missing (1)சிறிலங்காவில் இனிமேல் எதேச்சாதிகார ஆட்சிக்கோ, இராணுவ ஆட்சிக்கோ இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“கல்கமுவவில் நீர்ப்பாசன பயிற்சி நிறுவகத்தை திறந்து வைத்து உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, 2015 ஜனவரி 8ஆம் நாளுடன் எதேச்சாதிகார, இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது.

இனிமேல் ஒருபோதும், அத்தகைய ஆட்சிக்கு நாட்டில் இடமில்லை.

சிலர் அதிகாரத்துக்கு வருவதற்காக செய்கின்ற சூழ்ச்சிகளை மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

எந்த முறைகேடும் நடந்திருந்தால் அதனை வெளிப்படுத்துமாறு சிலர் சவால் விடுத்தனர்.

இப்போது, முறைகேடுகள் அம்பலத்துக்கு வந்திருக்கின்றன. அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது என்று இப்போது எம்மால் மக்களுக்கு வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *