வடக்கு முதல்வரைச் சந்தித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
தனிப்பட்ட பயணமாக நேற்று சிறிலங்கா வந்த தமிழிசை சௌந்தர்ராஜன், இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் முதலமைச்சருடன், அமைச்சர் அனந்தி சசிதரனும், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் கலந்து கொண்டனர்.