மேலும்

இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே

சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார் என, இராணுவ செயலகம் நேற்று அறிவித்துள்ளது.

இராணுவ தலைமை அதிகாரியாக இருந்த லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டதை அடுத்தே, மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே இராணுவத்தின் தொண்டர் படைகளின் தளபதியாகவும், இராணுவத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளுக்கான தளபதியாகவும்,  பணியாற்றி வந்தார்.

1984ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்த இவர், முதலாவது கவசப் படைப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்.

35 ஆண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே, பல்வேறு கட்டளை மற்றும் பணியக பதவிகளை வகித்துள்ளார்.

55ஆவது டிவிசனின் பிரதி கட்டளை அதிகாரியாக பணியாற்றிய அவர், இறுதிக்கட்டப் போரில் வன்னியில் புதிதாக உருவாக்கப்பட்ட அதிரடிப்படை 3இன் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

போர் முடிந்த பின்னர், 52 மற்றும் 64ஆவடீ டிவிசன்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார்.இராணுவ செயலராகவும் பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *