மேலும்

ஆயுதப்படைகளை பணியில் ஈடுபடுத்த உத்தரவு

அவசரகாலச் சட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால், ஆயுதப்படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கான உத்தரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகளுக்கு அமைய, ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, அனைத்து மாவட்டங்களிலும் தேவைப்பட்டால் ஆயுதப்படைகளின் உதவியைப் பெற முடியும் என, சிறிலங்கா அதிபரின் சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசரகாலச் சட்ட பிரகடனத்தைப் போல, இந்த ஒழுங்குமுறைக்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறத் தேவையில்லை.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், சிறிலங்கா அதிபரிடம் உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த ஒழுங்குகளை நடைமுறைப்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *