மேலும்

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது – ஜெனரல் கொட்டேகொட

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர், சிறிலங்கா அதிபரால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் கடந்த நான்கு மாதங்களாக நடைமுறையில் இருந்து வந்தது.

மாதம் தோறும் நீடிக்கப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் நேற்று முன்தினத்துடன் காலாவதியாகியிருந்தது. எனினும், இதனை நீடிப்பதற்கான அறிவிப்பு சிறிலங்கா அதிபரிடம் இருந்து வெளியாகவில்லை.

இந்த நிலையில், அவசரகாலச்சட்டம் இனி நீடிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *