மேலும்

மாதம்: July 2017

மேலும் 9 இரட்டைக் குடியுரிமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் – உதய கம்மன்பில

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மேலும் 9 இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும், அவர்களின் பெயர்களை அம்பலப்படுத்தப் போவதாகவும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மாலிக்கு அனுப்பப்படவுள்ள சிறிலங்கா படையினர் குறித்து ஐ.நா அதிகாரிகள் பேச்சு

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினரை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாகவும், அமைதிப்படையினருக்கான பயிற்சிகள் தொடர்பாகவும், ஐ.நா அதிகாரிகள் நேற்று முன்தினம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா அதிபரின் செயலராக செவ்வாயன்று பதவியேற்கிறார் ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபரின் செயலராக, மூத்த சிவில் சேவை அதிகாரியும், கிழக்கு மாகாண ஆளுனருமான ஒஸ்ரின் பெர்னான்டோ வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளார்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், 54 ஏக்கர் காணிகளை நாளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம்

வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள 54 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் – பிக்குகள் இழுபறியால் இராணுவத் தளபதி நியமனத்தில் தாமதம்

அமைச்சர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு இடையிலான இழுபறியினாலேயே, சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசியாவின் மிக உயரமான இரட்டைக் கோபுரம் – கொழும்பில் அமைக்க உடன்பாடு கைச்சாத்து

ஆசியாவின் மிக உயரமானதும், உலகின் ஒன்பதாவது உயரமானதுமான இரட்டைக் கோபுரக் கட்டடம் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் அமைக்கப்படவுள்ளது.

சிறிலங்கா அதிபரின் செயலராகிறார் ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் செயலராக ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதில் இருந்து. அவரது செயலராக பி.பி.அபயகோன் பதவி வகித்து வந்தார்.

இராணுவத் தளபதியாகும் வாய்ப்பை இழக்கும் நிலையில் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

கூட்டுப்படைகளின் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ள போதிலும், ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இன்னமும் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகவில்லை என்று, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவதற்கான முட்டுக்கட்டை அகன்றது

அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனுடன் இணைந்த 15 ஆயிரம் ஏக்கர் காணியில் கைத்தொழில் பூங்காவையும் அமைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம்  இரண்டு சீன நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை சிறிலங்கா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பொத்துவில், புத்தளத்தில் ராடர்களைப் பொருத்த ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவி

சிறிலங்காவில் காலநிலை பற்றிய தகவல்களை தரக்கூடிய ராடர் வலையமைப்பை நிறுவுவதற்கு, ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவியை ஜப்பான் வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.