சிறிலங்கா அதிபரின் செயலராக செவ்வாயன்று பதவியேற்கிறார் ஒஸ்ரின் பெர்னான்டோ
சிறிலங்கா அதிபரின் செயலராக, மூத்த சிவில் சேவை அதிகாரியும், கிழக்கு மாகாண ஆளுனருமான ஒஸ்ரின் பெர்னான்டோ வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் செயலராக இருந்த பி.பி.அபயகோன் கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்தே, இந்தப் பதவியை ஒஸ்ரின் பெர்னான்டோ ஏற்றுக் கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் செயலர் பதவியை ஏற்றுக் கொள்ள தாம் இணங்கியுள்ளதாக ஒஸ்ரின் பெர்னான்டோ உறுதிப்படுத்தியுள்ளார்., நாளை கிழக்கு மாகாண ஆளுனர் பதவியை விட்டு தாம் விலகவிருப்பதாகவும் அவர் கூறினார்.
2001- 2004 வரையான காலகட்டத்தில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலராக பணியாற்றிய ஒஸ்ரின் பெர்னான்டோ, 2015 ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா அதிபரின் ஆலோசகராகவும், கிழக்கு மாகாண ஆளுனராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.