மேலும்

சிறிலங்கா அதிபரின் செயலராகிறார் ஒஸ்ரின் பெர்னான்டோ

austin-maithriசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் செயலராக ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதில் இருந்து. அவரது செயலராக பி.பி.அபயகோன் பதவி வகித்து வந்தார்.

அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்று பதவியை விட்டு விலகினார்.

இதையடுத்தே, சிறிலங்கா அதிபரின் செயலராக, தற்போது கிழக்கு மாகாண ஆளுனராகப் பணியாற்றும் ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளார்.

அடுத்த மூன்று நாட்களுக்குள் தாம் சிறிலங்கா அதிபரின் செயலராகப் பதவியேற்கவுள்ளதாக ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஒஸ்ரின் பெர்னான்டோ, சிறிலங்கா அதிபரின் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *