கொமடோர் தசநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய் – என்கிறார் கம்மன்பில
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச்செயலர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், கொமடோர் தசநாயக்க, 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் தொடர்புபடவில்லை. இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அடிப்படையற்றவை.
இதுதொடர்பான பகிரங்க விவாதத்துக்கு வருமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளருக்கு சவால் விடுகிறேன்.
ஒரு போர் வீரனை கடத்தல்காரன், காணாமல்போகச் செய்தவர் என்று அழைக்கக் கூடாது.
குற்றமிழைத்தவர்களை நாங்கள் பாதுகாக்கும் நிலையில் இல்லை. ஆனால், நீதிக்கு அப்பால் நடப்பதை காண்கிறோம். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை வழங்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.