மேலும்

நாள்: 2nd March 2016

முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய  ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் – சிறிலங்காவுக்கு சுனாமி ஆபத்து இல்லை

இந்தோனேசியாவின் சுமாத்ரா கடலில் இன்று மாலை ஏற்பட்ட 7.9 அளவுடைய பாரிய நிலநடுக்கத்தினால், சிறிலங்காவில் சுனாமி ஏற்படும் ஆபத்து இல்லை என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

செய்தி இணையத்தளங்களை பதிவு செய்ய சிறிலங்கா அறிவுறுத்தல்- ஊடக சுதந்திரம் கேள்விக்குறி

அனைத்து செய்தி இணையத்தளங்களையும் பதிவு செய்து கொள்ளுமாறு சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காணி அமைச்சு ஜோன் அமரதுங்க வசமானது

சிறிலங்காவின் காணி அமைச்சராக, ஐதேகவைச் சேர்ந்த ஜோன் அமரதுங்க இன்று மதியம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

சந்திரிகா- சுஸ்மா புதுடெல்லியில் சந்திப்பு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பாரத லக்ஸ்மன் கொலை சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான தெமட்டகொட சமிந்த வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படும் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இன்று பிற்பகல் 4.15 மணியளவில் தெமட்டகொட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

எட்காவுக்கும் இந்தியாவின் நோயாளர் காவுவண்டிச் சேவைக்கும் தொடர்பில்லை – ஹர்ஷ டி சில்வா

இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு உடன்பாட்டுக்கும் (எட்கா), விரைவில் இந்தியாவினால் தொடங்கப்படவுள்ள நோயாளர் காவு வண்டிச் சேவைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி மத்திய குழுவின் சிறப்புக் கூட்டம் – மகிந்த அணியை களையெடுக்கும் அடுத்த நகர்வு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்கிறார் பரணகம

பொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவிக்கு கடும் போட்டி – எஸ்.பிக்கு வாய்ப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலராக இருந்த பேராசிரியர் விஸ்வ வர்ணபால காலமானதையடுத்து, அந்தப் பதவியைப் பிடிக்க பலத்த போட்டி எழுந்துள்ளது.