மேலும்

நாள்: 20th March 2016

சீன முதலீட்டாளருடன் இணக்கத்தை ஏற்படுத்த சிறிலங்கா தீவிர முயற்சி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஏப்ரல் 6ஆம் நாள் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும், சீன முதலீட்டாளருக்கும் இடையில் இணக்கம் ஏற்படுத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு திருத்தத்தில் அமெரிக்கா தலையீடு – கூட்டு எதிர்க்கட்சி விசனம்

அரசியலமைப்புத் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்கா கருத்தரங்கை நடத்துவது குறித்து, கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுபினர் தினேஸ் குணவர்த்தன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மூடப்பட்ட டீசல் மின் உற்பத்தி நிலையங்களை மீளத்திறக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம்

நுரைச்சோலை அனல் மின்நிலையம் செயற்படத் தொடங்கிய பின்னர், கடந்த ஆண்டு மூடப்பட்ட டீசல் மின் உற்பத்தி நிலையங்களை மீள இயக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போர்வீரர்களை அனைத்துலக சமூகம் விசாரிக்க அனுமதியோம் – சம்பிக்க ரணவக்க

ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் இருக்கும் வரையில், எந்தவொரு சூழ்நிலையிலும், போர்வீரர்களை அனைத்துலக சமூகம் விசாரணை செய்ய அனுமதிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மின்மாற்றிகள் வெடிப்பு குறித்து விசாரிக்க நாளை வருகிறது ஜேர்மனி நிபுணர் குழு

பியகம மற்றும் கொட்டகொட உபமின் நிலையங்களில் வழமைக்கு மாறான முறையில்- இரண்டு மின் மாற்றிகள் வெடித்தமை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஜேர்மனியில் இருந்து நிபுணர்கள் குழுவொன்று நாளை சிறிலங்கா வரவுள்ளது.

கி.பி.அரவிந்தன் எனும் ஆளுமையின் 1ஆவது ஆண்டு நினைவாக… – நேர்காணல்: பகுதி 1

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி,கவிஞர், எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் அவர்களுடன் 2014இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் உரையாடல்.  நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா.

இறுதிப் போரில் 50 கவச ஊர்திகளை இழந்தோம் – சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் கடைசித் தாக்குதல் நடந்த போது தான், பீஜிங்கில் இருந்து கொழும்பு வந்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

முஸ்லிம் காங்கிரசின் பாலமுனை மாநாட்டில் மைத்திரி, ரணில், சம்பந்தன்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19ஆவது தேசிய மாநாடு நேற்று அம்பாறை- பாலமுனையில் இடம்பெற்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.

க.பொ.த சாதாரணதரத் தேர்வில் முதல் 12 இடங்களுக்குள் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் இல்லை

க.பொ.த சாதாரணதரத் தேர்வு பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், இந்தத் தேர்வில் முதல் 12 இடங்களுக்குள், தமிழ், முஸ்லிம் மாணவர்கள் எவரும் இடம்பெறவில்லை.

வரும் சனிக்கிழமை பாரீசில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், சமூக அக்கறையாளரும், புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் சனிக்கிழமை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறவுள்ளது.