சந்திரிகா- சுஸ்மா புதுடெல்லியில் சந்திப்பு
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வருப் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சும், ஓஆர்எவ் என்ற அமைப்பும் இணைந்து புதுடெல்லியில் நேற்று நடத்திய கருத்தரங்கு ஒன்றில் சந்திரிகா குமாரதுங்க பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையிலேயே நீண்டகால நண்பர்களான சந்திரிகாவும் சுஸ்மாவும் இன்று தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.