மேலும்

நாள்: 17th March 2016

மகிந்தவின் மேடையில் தடுக்கி விழுந்தார் உதய கம்மன்பில

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடக்கும் மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியின், அரச எதிர்ப்புப் பேரணியின் போது, மேடையில் தடுக்கி விழுந்தார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில.

மகிந்த அணியினரின் அரச எதிர்ப்புப் பேரணி ஆரம்பம்

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியினரின் பேரணி தற்போது கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பேரணியில்  மகிந்த ராஜபக்ச தற்போது இணைந்து கொண்டுள்ளார்.

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 117ஆவது இடம்

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் சிறிலங்காவுக்கு 117ஆவது இடம் கிடைத்துள்ளது. ஐ.நா அமைப்பாகிய நிலையான அபிவிருத்தித் தீர்வுகளுக்கான வலையமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் 2016 ஆம் ஆண்டுக்கான தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இராணுவச் சிப்பாயை காட்டுக்குள் உதைத்துக் கொன்றார் கோத்தா – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

கோத்தாபய ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றிய போது, இராணுவச் சிப்பாய் ஒருவரின் மரணத்துக்கு காரணமாக இருந்தார் என்று குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

தன்மீதான தாக்குதலுக்கு உதவிய புலி உறுப்பினரை விடுவிக்கக் கோருகிறார் சரத் பொன்சேகா

தன் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த உதவியவர் என்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி்களின் செயற்பாட்டாளரை விடுவிக்குமாறு அமைச்சர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆறுமுனைப் போட்டி: யாருக்கு இலாபம்? – ஆர்.மணி

இப்போதுள்ள நிலையே நீடித்தால், வரும் மே 16 ம் தேதி சட்டமன்றத் தேர்தல் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் முழுக்க, முழுக்க வித்தியாசமான தேர்தல்தான். காரணம், முதல் முறையாக தமிழ் நாடு ஆறுமுனைப் போட்டியை சந்திக்கப் போகிறது.

மீண்டும் மின்தடை ஏற்பட்டால் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவேன் – ரணில் எச்சரிக்கை

நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் இன்னொரு மின்சாரத் தடை ஏற்படுமானால்,  பல உயர் அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

பலாலி விமான நிலைய விரிவாக்கம் – இந்திய அதிகாரிகள் குழு இன்று நேரில் ஆராய்கிறது

பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்த ஆய்வுக்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கை இணைக்க அனுமதியோம் – ரவூப் ஹக்கீம்

மூன்று பத்தாண்டுகளாக நீடிக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு இணைப்பை முன்மொழிந்தால், முஸ்லிம்களுக்கும் தனி மாகாணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம்.

சீபாவில் கையெழுத்திட மறுத்ததால் இந்தியாவே மகிந்தவைத் தோற்கடித்து – விமல் வீரவன்ச

சீபா உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்ததால், சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க இந்தியா வெளிப்படையாகவும், இரகசியமாகவும், பணியாற்றியதாகத் தெரிவித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணி்யின் தலைவர் விமல் வீரவன்ச.