காணி அமைச்சு ஜோன் அமரதுங்க வசமானது
சிறிலங்காவின் காணி அமைச்சராக, ஐதேகவைச் சேர்ந்த ஜோன் அமரதுங்க இன்று மதியம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
காணி அமைச்சராகப் பதவி வகித்த எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன அண்மையில் காலமானதை அடுத்து அந்தப் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது.
இந்தப் பதவி தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐதேக மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையில் இழுபறி நிலவி வந்தது.
இந்த இழுபறி இன்று முடிவுக்கு வந்து, ஐதேகவின் ஜோன் அமரதுங்கவுக்கு காணி அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளது.
காணி அமைச்சராப் பதவியேற்ற ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க ஏற்கனவே, சிறிலங்கா அமைச்சரவையில் சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ விவகார அமைச்சராகப் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.