மேலும்

நாள்: 17th August 2015

யாழ்ப்பாணத்தில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி கூட்டமைப்பு அமோக வெற்றி

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உடுப்பிட்டி, சாவகச்சேரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, நல்லூர், பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோப்பாய், மானிப்பாய், வட்டுக் கோட்டைஆகிய அனைத்துத் தொகுதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் – தொகுதி ரீதியான முடிவுகள்

  சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலின் தொகுதி மட்டத்திலான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் ஐதேக, ஐ.ம.சு.மு ஆகிய கட்சிகள் இரண்டும், மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றன.

யாழ். மாவட்டத்தில் கூட்டமைப்பு முன்னணியில் – தீவகத்திலும் ஆதிக்கம்

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இது வரை எணணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், 1 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரியால் வெளியேற்றப்பட்ட சுதந்திரக் கட்சியின் 13 மத்திய குழு உறுப்பினர்கள்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்ட 13 பேரினது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அஞ்சல் மூல வாக்களிப்பு – மாவட்ட ரீதியான முடிவுகள்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலின்  அஞ்சல் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை இரத்தினபுரி, திருகோணமலை, அம்பாந்தோட்டை, காலி,மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவில் 3 இலங்கையர்களுக்கு தலையை வெட்டி மரணதண்டனை

சவூதி அரேபியாவில் இன்று மூன்று இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இருந்து 25 பேரை நீக்கினார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 25 பேரை கட்சியின் தலைவரான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முடிந்தது வாக்களிப்பு – தமிழர் பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவு

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளதையடுத்து, வாக்குப் பெட்டிகளை முத்திரையிட்டு, அவற்றை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அனுராதபுர, கம்பகா மாவட்டங்களில் வாக்களிப்பில் அதிக ஆர்வம்

அனுராதபுர, கம்பகா மாவட்டங்களில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுராதபுர மாவட்டத்தில், காலை 10 மணியளவிலேயே 40 வீத வாக்குகள் பதிவாகி விட்டதாக மாவட்ட தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காலையிலேயே சுறுசுறுப்பான வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு சுறுசுறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலையில் இருந்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் சென்ற வாக்களித்து வருகின்றனர்.