மேலும்

நாள்: 1st August 2015

குறுகியகாலப் பிரதமர் பதவியைக் கோருகிறார் மகிந்த – கௌரவமாக விலகப் போகிறாராம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, கௌரவமாக அரசியலை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ராஜபக்ச குடும்பத்தினர் கோரியுள்ளதாக ‘சத்ஹண்ட’ சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமற்போகச் செய்யப்பட்டோர் குறித்த ஐ.நா செயலணிக்குழுவின் சிறிலங்கா பயணம் இடைநிறுத்தம்

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா செயலணிக்குழு, வரும் திங்கட்கிழமை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக விரைவில் யோசித ராஜபக்சவிடம் விசாரணை

சிறிலங்கா ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான லெப். யோசித ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் நிதியுதவி பெறவில்லை – என்கிறார் மகிந்த

தேர்தல் பரப்புரைகளுக்காக சீனாவிடம் இருந்து எந்த நிதியுதவியையும் தாம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்காவில் எல்லாத் தரப்புடனும் ஆலோசித்தே ஐ.நா உதவும் – பான் கீ மூனின் பேச்சாளர்

ஐ.நாவின் எந்த திட்டமும், சிறிலங்கா அரசாங்கம், வடக்கு மாகாணசபை மற்றும் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரதும், ஆலோசனையுடனேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனின் நிலைப்பாடு குறித்து தேர்தலுக்குப் பின்னர் பேசுவோம் – இரா.சம்பந்தன்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பரப்புரை செய்யப் போவதில்லை என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ள முடிவு தொடர்பாக, தேர்தல் முடிந்த பின்னர் அவருடன் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.