மேலும்

நாள்: 30th August 2015

விசாரணையைத் தவிர்க்க அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றாரா சுசில் பிரேமஜெயந்த?

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த திடீரென அமெரிக்காவுக்குச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்ரெம்பர் 17இல் முதலாவது முறைசாரா கூட்டத்தை ஜெனீவாவில் கூட்டுகிறது அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஒன்றை முன்வைப்பது தொடர்பான முதலாவது முறைசாரா கூட்டத்தை அமெரிக்கா வரும் செப்ரெம்பர் 17ஆம் நாள் ஜெனீவாவில் நடத்தவுள்ளது.

கதிர்காமர் கொலை குறித்து புதிய விசாரணை – குடும்பத்தினர் கோரிக்கை

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக, புதிய விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று கதிர்காமரின் மகள் அஜிதா மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கவுள்ளனர்.

ஜெனிவா அமர்வுக்கு முன்னர் மூன்று முக்கிய அறிக்கைகளை தயார்படுத்துகிறது சிறிலங்கா

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன்னர், மூன்று முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் தயார்படுத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏமாற்றி விட்டதா அமெரிக்கா?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், ஜெனிவா களம் குறித்த கலக்கத்துடன் காத்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்தியோடு வந்திறங்கியிருந்தார் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.

ஐ.நா பொதுச்சபையில் சிங்களமொழியில் உரையாற்றுவார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிங்களத்தில் உரையாற்றக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா பொதுச்சபையில் வரும் செப்ரெம்பர் 30 ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.

போரில் உடல்உறுப்பை இழந்து நாடாளுமன்றம் செல்லும் முதல் உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 63 புதுமுக உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறீஸ்கந்தராஜா, போரினால் உடல் உறுப்பினை இழந்த முதல் நபராக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்கவுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்புக்கு வழங்க முடியாது- சுதந்திரக் கட்சி நிராகரிப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க முடியாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்கே வழங்கப்பட வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

சிறிலங்கா நாடாளுமன்ற சம்பிரதாயத்தின் படி இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.