மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காலையிலேயே சுறுசுறுப்பான வாக்களிப்பு

batticaloa-voting (1)மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு சுறுசுறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலையில் இருந்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் சென்ற வாக்களித்து வருகின்றனர்.

முன்னைய நாடாளுமன்றத் தேர்தல்களை விடவும், இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் அதிகளவில் வாக்களித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, முதியவர்களும், சிறப்புத் தேவையுடையோரும் கூட, வாக்களிப்பு நிலையத்துக்கு ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

batticaloa-voting (1)batticaloa-voting (2)batticaloa-voting (3)batticaloa-voting (4)batticaloa-voting (5)batticaloa-voting (6)batticaloa-voting (7)

அதேவேளை. மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், பொன் செல்வராசா, இரா. துரைரத்தினம், வியாழேந்திரன், குணசீலன் சௌந்தரராஜன், ஞானமுத்து சிறிநேசன் ஆகியோரும் இன்று காலையிலேயே தமது வாக்குகளை அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *