மேலும்

நாள்: 26th August 2015

ராஜபக்சவின் தோல்வி சீனாவுக்கு சிறந்த பாடம்- கேணல் ஹரிகரன்

சீனர்கள் நிதியை விரும்புகிறார்கள். சீன அதிபர் பட்டுப்பாதைத் திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறார். இவ்விரண்டையும் அடைவதற்கு சீனாவிற்கு சிறிலங்கா மிகவும் முக்கியமானதாகும்.

கூட்டமைப்புடன் ஒன்றரை மணிநேரம் பேச்சு நடத்தினார் நிஷா பிஸ்வால்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

காலை வாரியது அமெரிக்கா – ஜெனிவாவில் சிறிலங்காவைக் காப்பாற்றப் போவதாக அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில், போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டாலும், சிறிலங்காவுக்குப் போதிய காலஅவகாசம் வழங்க கோரும், சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்வைக்கவுள்ளது.

செப்.2ஆம் நாளே புதிய அமைச்சரவை பதவியேற்பு – அமைச்சர் பதவிகள் குறித்து இணக்கம்

சிறிலங்காவின் புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்ரெம்பர் 2ஆம் நாளே புதிய அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறும் என்று ஐதேகவின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையில் 45 அமைச்சர்கள் – நாளை பதவியேற்பு நடக்குமா?

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை 45 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் என்று, ஐதேகவின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள், மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை மறந்தது அமெரிக்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் அமெரிக்கா அதிகளவு மென்போக்கை கடைப்பிடிப்பதாகவும், அதன் காரணமாகவே போர்க்குற்றங்கள், பொறுப்புக்கூறல் குறித்து, அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் வாய்திறக்கவில்லை என்றும் கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பிரகீத் கடத்தல்: கைதான 4 இராணுவ அதிகாரிகளுக்கும் 48 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ அதிகாரிகளையும் 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க, குற்றப்புலனாய்வுப் பிரிவு அனுமதியைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா அரசின் முயற்சிகள் அனைத்துலக சமூகத்துக்குத் திருப்தி – மைத்திரியிடம் நிஷா பிஸ்வால்

சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

தேசிய அரசாங்கத்தில் இணைகிறது ஈபிடிபி – டக்ளசுக்கு அமைச்சர் பதவி?

சிறிலங்காவில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கமாட்டார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கமாட்டார் என்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே பணியாற்றுவார் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.