மைத்திரியால் வெளியேற்றப்பட்ட சுதந்திரக் கட்சியின் 13 மத்திய குழு உறுப்பினர்கள்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்ட 13 பேரினது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இன்று மாலை வாக்களிப்பு முடிந்த கையுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான இரு முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட 13 பேரை மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளார்.
இவர்களுக்குப் பதிலாக, சந்திரிகா குமாரதுங்க, பேராசிரியர் விஸ்வ வர்ணபால உள்ளிட்ட 13 பேர், புதிய மத்திய குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விபரம்-
- சுசில் பிரேமஜெயந்த
- அனுர பிரியதர்சன யாப்பா
- டி.எம்.ஜெயரட்ன
- ரட்ணசிறி விக்கிரமநாயக்க
- ஜனக பண்டார தென்னக்கோன்
- பவித்ரா வன்னியாராச்சி
- ஜோன் செனிவிரத்ன
- நிர்மலா கொத்தலாவல
- டிலான் பெரேரா
- ரோகித அபேகுணவர்த்தன
- டலஸ் அழகப்பெரும
- பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்
- கமலா ரணதுங்க