மேலும்

நாள்: 4th August 2015

பூநகரியில் புதிதாக முளைத்தது பௌத்த வழிபாட்டுத் தலம்

கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் எதிர்காலம் பின்நோக்கித் திரும்புகிறதா?

ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றினால், அவர் தனது பழைய அரசியல் முறையைத் தொடர்ந்தும் பின்பற்றுவார். இதனால் நாட்டில் ஜனநாயக மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது.

பிரதமர் பதவிக்கான போட்டியில் ரணிலிடம் தோற்கிறார் மகிந்த – கருத்துக் கணிப்பில் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிடும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, பிரதமராவதற்கு  வாக்காளர்களிடம் போதிய ஆதரவு இல்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவை விடவும் பின்தங்கிய நிலையிலேயே அவர் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.

தமிழர்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது வட மாகாணம் – சிங்களவர்களை உருவேற்றுகிறார் சங்கநாயக்கர்

யாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு வரும் சிங்களவர்கள் தாக்கப்படுகின்றனர். இது தொடருமானால் வடமாகாணம் தமிழர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிடும் என்று சிங்கள பௌத்தவர்களுக்கு இனவெறியூட்டியிருக்கிறார் வடமாகாண சங்க நாயக்கர் வண. நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர்.

சிறிலங்காவுக்கான தரைவழிப்பாதை திட்டம் விரைவில் சாத்தியமாகும்- இந்திய அரசு நம்பிக்கை

தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில்  சாத்தியமாகக் கூடும் என்று இந்திய மத்திய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்ப 61 பௌத்த சிங்கள பேரினவாத அமைப்புடனுடன் மகிந்த உடன்பாடு

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி அளித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச 61 சிங்கள, பௌத்த பேரினவாத அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு இல்லாத புதிய நாட்டை உருவாக்கப் போகிறார் ரணில் – மகிந்த ராஜபக்ச

வடக்கு, கிழக்கு இல்லாத புதிய சிறிலங்காவை உருவாக்கவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முனைவதாக, குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

சுதந்திரக் கட்சியில் இருந்து சந்திரிகாவையும் வெளியேற்ற வேண்டும் என்கிறார் சுசில்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து, கட்சியின் அடுத்த மத்திய குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.