மேலும்

நாள்: 14th August 2015

மகிந்தவுக்காக கையெழுத்திடாமல் நழுவினார் பௌசி – மைத்திரியின் பிரதமர் வேட்பாளரா?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், தமக்குப் பிரதமர் பதவி வேண்டாம் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மைத்திரியின் ஆட்டம் ஆரம்பம் – சுசில், அனுரவை பதவியில் இருந்து நீக்கினார்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்தவையும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கியுள்ளார்.

மைத்திரியின் கடிதத்தை வெளியிடக் கூடாது – தேர்தல் ஆணையாளர் உத்தரவு

மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எழுதிய கடிதத்தை திரும்பத் திரும்ப வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மக்களின் ஆணைக்கு மதிப்பளியுங்கள் – மைத்திரிக்கு மகிந்த பதில் கடிதம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளிக்கும் ஆணைக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

சிறிலங்காவில் சித்திரவதைகள் – ஐ.நாவுக்குத் தெரியாதாம்

சிறிலங்காவில் போருக்குப் பின்னரும் தடுப்புக் காவலில் இருக்கும் கைதிகள் மீது சித்திரவதைகள் தொடர்வதாக வெளியான அறிக்கை தொடர்பாக ஐ.நா அறியவில்லை என்று, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

மகிந்தவை பிரதமராக்க இணங்கும் அவசர உடன்பாடு – மைத்திரிக்கு பதிலடி

வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக்சவைப் பிரதமரான நியமிப்பதற்கு ஆதரவு வழங்குவதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கிடையில் உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சி குறித்த மைத்திரியின் வாதம் சிறுபிள்ளைத்தனம் – யதீந்திரா

சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி நாடாக இருப்பதுதான் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கு நல்லது என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது, சிறு பிள்ளைத்தனமான வாதம்  என்று அரசியல் ஆய்வாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மைத்திரியின் கடிதம் – (முழுமையாக)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை வழங்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று எழுதிய 5 பக்க கடிதத்தின் முழுமையான விபரம்-

புலிகளுக்கு பணம் கொடுத்து வெற்றிபெற்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறார் சுசில்

விடுதலைப் புலிகளுக்குப் பயணம் கொடுத்தே அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார் என்று, ஐதேக தரப்பு கூறிய குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது பரப்புரைப் போர்

எதிர்வரும் 17ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளன. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள், கடுமையான பரப்புரைகளில் ஈடுபட்டு வந்தன.