மேலும்

அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி செர்ஜியோ கோர் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோர், இன்று காலை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

60 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தை மகிந்தவிடம் வழங்கியதாக கபில சந்திரசேன வாக்குமூலம்

எயர் பஸ் விமானக் கொள்வனவில் இலஞ்சமாகப் பெறப்பட்ட 60 மில்லியன் ரூபா, அப்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் சிறப்பு தூதுவர் செர்ஜியோ கோர் இன்று சிறிலங்கா பயணம்

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர், இன்று முதல் சிறிலங்கா மற்றும் மாலைதீவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா உள்நாட்டுப் போரில் இஸ்ரேலின் பங்கை விபரிக்கும் ஆவணங்கள்

சிறிலங்கா 1970இல், அரபு நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக, இஸ்ரேலுடனான தூதரக உறவுகளைத் துண்டித்தது. ஆயினும், கொடூரமான உள்நாட்டுப் போர் வெடித்த சுமார் ஓராண்டிற்குப் பிறகு, 1984இல் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவு திறக்கப்பட்டது.

சிறிலங்காவுடன் கலந்துரையாடவில்லை- ரஷ்ய தூதரகம் மறுப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் ரஷ்ய தூதுவர் எல். ஜகரியன் (L. Dzhagarya) அண்மையில் நடத்திய சந்திப்பின் போது நிதி மற்றும் தளபாடச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் 10 வீதம் வரை உயரும்?

சிறிலங்காவில் எரிபொருள்களின் விலைகள் இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் மீண்டும் உயரக் கூடும் என சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா கடலுக்குள் டோர்பிடோ

சிறிலங்காவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ மீது நடத்தப்பட்ட டோர்பிடோ தாக்குதல், முதல் பார்வையில் ஒரு தனிப்பட்ட கடற்படைச் சம்பவமாகத் தோன்றலாம். ஆனால் அதன் தாக்கங்கள் போர்க்களத்தைத் தாண்டி வெகுதூரம் பரவியுள்ளன.

அமெரிக்கா வழங்கிய 10 உலங்குவானூர்திகளும் சிறிலங்காவுக்கு புறப்பட்டன

சிறிலங்கா விமானப்படையின் செயற்திறனை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 சீ ரேஞ்சர் உலங்குவானூர்திகள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் எரிசக்தி நெருக்கடி – விரைவில் மின்வெட்டும் நடைமுறைக்கு வரும்

தரமற்ற நிலக்கரி மற்றும் தடைப்பட்டுள்ள எரிபொருள் இறக்குமதியினால், சிறிலங்காவில்  மின் உற்பத்தி கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால்  நீண்டகால மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர்.

சிறிலங்காவிடம் உள்ள எரிபொருள் கையிருப்பு- வெளியிட்டார் குமார ஜயக்கொடி

சிறிலங்காவில் எரிபொருள் கையிருப்பு  தொடர்பாக,  எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று காலை அவர் நாடாளுமன்றத்தில்  ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார்.